கிராமத்து காதல் பாட்டு :
சூரியனும் ஒளிஞ்சிடுச்சு -வெட்கப்பட்டு ,
உன்னை தொட வந்த தூறலும் நீ குடை விரிச்சதால்-துக்கப்பட்டு ,
வெள்ளமா சேர்ந்து வந்து உன் கால் தொடவே -கஷ்டப்பட்டு
நீ துள்ளி துள்ளி ஓடியதால் தன்னை புதைசிடுச்சு -நஷ்டப்பட்டு ............!
உன் கை இடுக்குல நாணத்தையும் , உன் கால் இடுக்குல நடுக்கத்தையும்
காமிக்கிறே எனக்காகத்தான் ......!
என் பாதையிலே பக்குவத்தையும் .பார்வையிலே பத்தியத்தையும்
சேமிக்கிறேன் உனக்காகத்தான் ......!
நீ கூந்தல் குதிக்க நடக்கயிலே என் குருதிக்குள்ள சுனாமி ...,
உன் ஓரக்கண்ணு பார்வைக்கு நான் ரகசிய பினாமி .....
சந்தைக்கு நீ போகையிலே காய் கனி எல்லாம் பூவா மாறி தூவுது ....,
கடைவீதி நீயும் போனா வளையல் உன் கைய சேர ஏங்குது ........!
(உன் கை இடுக்குல)
நீ நிலவா பல்லைக்காட்டி சிரிக்குற ..,
நான் ஆழி அலையப்போல கொதிக்கிறேன் ....!
நீ சற்று தலை நிமிர்த்தி என்னைப்பார்த்தால் கூட .....,
நான் வான வேடிக்கையா வெடிக்கிறேன் .....!
நீ காந்த துண்டு ,நான் இரும்பு குண்டு .......,
உன்ன நோக்கி இழுக்குற...........!
நீ கதிர் அருவா , நான் கம்பங்கதிரு .....
என்ன சறுக்கு சறுக்குனு அறுக்குற........!
நீ கைகாட்டும் திசைய நோக்கி விரைந்து போகும் என் காலு வண்டி ....!
தைரியமா வந்து ஏறிக்கடி காலம் முழுசும் நான் கேரண்டி டி ..........!
(உன் கைஇடுக்குல )
(சூரியனும்)
-கா.வாசிம் அகமது
No comments:
Post a Comment